news

பதிலடி தான் பதில்|இஸ்ரேல்-ஈரான் போர் களத்தில் ஈரான் கடும் வேகம்..

  • 17-06-2025
  • 12:31:48 PM

இஸ்ரேல்-ஈரான் பதற்றம் உச்சத்தில்: “பேச்சுவார்த்தைக்கு இடமில்லை” என ஈரான் திட்டவட்டம்! மேற்கு ஆசியாவில் நிலவும் நிலையான சிக்கல்களில் ஒன்று, தற்போது பரபரப்பான போர் சூழ்நிலைக்கு வித்திட்டுள்ள இஸ்ரேல் - ஈரான் பதற்றம். அண்மையில் இஸ்ரேல், ஈரானின் முக்கிய அணு உலை மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி அளிக்க ஈரான் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது. இந்த பரஸ்பர தாக்குதல்கள் இரு நாடுகளின் உறவை மட்டும் அல்லாமல், சர்வதேச அமைதிக்கும் பெரும் சவாலாக உள்ளன. தாக்குதல்களின் தொடக்கம்: Operation Rising Lion கடந்த வெள்ளிக்கிழமை “Operation Rising Lion” எனும் பெயரில் இஸ்ரேல், ஈரானின் முக்கிய அணு உலை மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதை தொடர்ந்து, "True Promise 3" எனும் பதில் நடவடிக்கையை ஈரான் தொடங்கியது. இதில், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணைகள் தாக்கியது. இந்த தாக்குதலில் தூதரக கட்டடம் லேசாக சேதமடைந்தாலும், உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடல் ஈரானின் தாக்குதலை அடுத்து அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் பல இடங்களில் புகை மண்டலமாக காணப்பட்டது. ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகள் தாக்கம் குவாம் நகர் அருகே உள்ள போர்டோவ் அணு உலை மீது நடத்திய தாக்குதலால் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. மக்கள் அச்சத்தில் ஓடினர். மேலும், ஈரான் ராணுவத்தின் குவாட் படைப்பிரிவின் கட்டுப்பாட்டு மையம் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஊடக நிலையம் தாக்குதலின் நிமிடங்கள் மிகவும் கவலைக்கிடமான தாக்குதலாக, ஈரான் அரசு நடத்தும் தொலைக்காட்சி நிறுவன கட்டடம் மீது இஸ்ரேல் ஏவுகணை வீசியது. பெண் செய்தி வாசிப்பாளர் நேரலையில் செய்தி வாசித்து கொண்டிருந்த வேளையில் இந்த தாக்குதல் நடைபெற்றது. இது நேரடியாக ஒளிபரப்பான காட்சியாக, உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தாக்குதலுக்குப் பிறகும், பற்றி எரியும் கட்டடம் முன்பே செய்தியாளர் செய்திகளை நேரலையில் வழங்கியதை பலரும் பாராட்டியுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என ஈரான் திடமான நிலை இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி தங்களின் முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆனால், ஈரான் அதற்குப் பதிலாக, “பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. தாக்குதலுக்கு பதிலடி தான்!” என தன்னம்பிக்கையுடன் பதில் அளித்துள்ளது. மேலும், கத்தார் மற்றும் ஓமன் போன்ற நாடுகளுடன், இந்த கருத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய மாணவர்கள் பாதுகாப்பு நடவடிக்கை மேற்காசியாவின் இந்த கடுமையான சூழ்நிலை மத்தியில், ஈரானில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியை மத்திய அரசு ஆரம்பித்துள்ளது. ஆர்மீனியா வழியாக அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.

  • உலகம்

Comments

    ..

Write Your Comments

Recent News