news

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் ஓய்வு: அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் திங்கட்கிழமை பொறுப்பேற்பு

  • 21-11-2025
  • 04:30:26 PM

உச்சநீதிமன்றத்தின் 52ஆவது தலைமை நீதிபதியான பி.ஆர். கவாய், சட்ட சேவையில் 45 ஆண்டுகளைக் கடந்த பயணத்தின் இறுதிக்கட்டமாக, இன்று அதிகாரப் பூர்வமாக பணி ஓய்வு பெறுகிறார். கடந்த மே 14ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற அவர், வரும் திங்கட்கிழமை 65 வயதை எட்டும் காரணத்தால், விதிகளின்படி இன்று தனது பதவியிலிருந்து விலகுகிறார். விடைபெறும் விழா – ‘நான் மதச்சார்பற்றவன்’ என உருக்கமான உரை அவரது ஓய்வை முன்னிட்டு, டெல்லியில் நேற்று சிறப்பு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், “நான் புத்த மதத்தைப் பின்பற்றுபவன். ஆனால் என் நீண்டகால நீதித்துறை பயணத்தின் ஒவ்வொரு நாளிலும் மதச்சார்பற்ற தன்மையை உறுதியாக கடைபிடித்து வந்தேன்” என்று குறிப்பிடினார். அவரது பணிக்காலத்தில் பல சர்வதேச பல்கலைக்கழகங்களில் — குறிப்பாக ஹார்வர்ட் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் — அரசியலமைப்பு, சுற்றுச்சூழல் மற்றும் நீதித்துறை தொடர்பான பல முக்கிய தலைப்புகளில் சிறப்பு விரிவுரைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. முக்கிய தீர்ப்புகள் – நீதித்துறை வரலாற்றில் இடம்பிடித்த கவாய் 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.ஆர். கவாய், தனது காலத்தில் நாட்டின் சட்டப்பரப்பை மாற்றியமைத்த பல முக்கிய தீர்ப்புகளை அளித்தார். ஜம்மு & காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து (அர்டிக்கிள் 370) ரத்து செல்லும் என்று தீர்ப்பு வழங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு அவர் தலைமை தாங்கினார். தேர்தல் பத்திரத் திட்டங்கள் ரத்து செய்யும் தீர்ப்பும் அவரின் காலத்தில் வழங்கப்பட்டது. சட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என்று தெளிவுபடுத்திய தீர்ப்பும் அவரது தலைமையில் வெளிவந்தது. இந்த தீர்ப்புகள் அனைத்தும் நாட்டின் அரசியலமைப்பு சட்ட வரலாற்றில் சிறப்பு இடத்தைப் பெற்றவை. அடுத்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் – திங்கட்கிழமை பதவியேற்பு பி.ஆர். கவாய் இன்று ஓய்வு பெறுவதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் 53ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் வரும் திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார். நீண்ட காலமாக நீதித்துறையில் முக்கியப் பங்காற்றியவர் என்பதால், அவரிடம் நாட்டின் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.

  • இந்தியா

Comments

    ..

Write Your Comments

Recent News